நான் போகிறேன்! கொடூர தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல்தாரி துப்பாக்கி புகைப்படத்துடன் பெண்ணுக்கு அனுப்பிய பதிவு


அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாக்குதல்தாரி கொடூர சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்னர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு குறித்து தெரியவந்துள்ளது.

அதன்படி செவ்வாய்கிழமை காலை 9.16க்கு இன்ஸ்டாகிராமில் கடைசி பதிவை வெளியிட்டுள்ளான் தாக்குதாரி சல்வடோர் ரமோஸ்.
அதில் ’நான் போகிறேன்’ என ஒரு பதிவை போட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் ஒரு பெண்ணை டேக் செய்து துப்பாக்கி புகைப்படங்களை இணைத்து பதிவு போட்டுள்ளார்.
அதில், என்னிடம் ஒரு ரகசியம் இருக்கிறது, நான் உன்னிடம் சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

நான் போகிறேன்! கொடூர தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல்தாரி துப்பாக்கி புகைப்படத்துடன் பெண்ணுக்கு அனுப்பிய பதிவு

போதை பழக்கத்திற்கு தாய் அடிமை! துப்பாக்கிச்சூடு தாக்குதல்தாரி குறித்து அதிர்ச்சி தகவல்

துப்பாக்கி புகைப்படங்களை பார்த்து பயந்து போன அப்பெண், உங்கள் துப்பாக்கி என்னை செய்ய போகிறது என கேட்க அதற்கு சல்வடோர் உன்னை டேக் செய்ய வேண்டும் என விரும்பினேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அப்பெண் எதை பற்றி என கேட்க, நான் 11 மணிக்கு சொல்கிறேன் என சல்வோடார் குறிப்பிட்டுள்ளார்.
சரியாக அடுத்த இரண்டு மணி நேரத்தில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகள் மற்றும் ஆசிரியைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இத்தாக்குதலில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நான் போகிறேன்! கொடூர தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல்தாரி துப்பாக்கி புகைப்படத்துடன் பெண்ணுக்கு அனுப்பிய பதிவு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.