மேகாலயாவில் பாரதம் எங்கும் பாரதி நிகழ்ச்சி| Dinamalar

சென்னை: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாட்டத்தில், ஒரு பகுதியாக ‘ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ சார்பில், மகாகவி பாரதியாரின் 100 வது ஆண்டு நினைவை போற்றும் வகையிலும், அவரது செய்தியை உலகம் முழுவதும் பரப்பும் வகையிலும், ‘பாரதம் எங்கும் பாரதி’ என்ற நிகழ்ச்சி மேகாலயா மாநிலம் ஷில்லாங், உம்ரோய் பகுதியில் உள்ள உம்ரோய் ராணுவ மையத்தில் அமைந்துள்ள ரெட் ஹார்ன்ஸ் அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவில், சென்னை, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சின் முரளி வரவேற்புரை நிகழ்த்தினார். பாரதிக்கு அஞ்சலி செலுத்தி விதுஷி எச்.ஆர். மீனாட்சி பேசினார்.

தலைமை விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், சிறப்பு விருந்தினராக மேஜர் ஜெனரல் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சதிஷ்குமார் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை வழக்கறிஞர் சுபா நடத்தினார். இந்த நிகழ்ச்சி தினமலர் யூ டியூப் பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.