கல்குவாரி குளத்தில் குளிக்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

நீச்சல் தெரியாமல் கல்குவாரியில் குளித்த மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் தேவா. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் அங்கு உள்ள கல்குவாரி குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார் நீச்சல் தெரியாததால் தினேஷ் தர்மாகோல் உதவியுடன் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனையடுத்து அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய தினேஷ் தேவாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்..

இரவானதால் தேர்தல் பணியில் தொய்வு ஏற்பட்டது. நீண்ட நேர தேடுதலுக்கு பின் தேவாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.