தந்தூரி சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு.. கெட்டுப்போன சிக்கன்.. உணவகங்களில் அதிரடி ரெய்டு..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சிக்கன் தந்தூரி சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருமுருகன் என்ற அந்த மாணவர் கடந்த 24ம் தேதி 5 ஸ்டார் எலைட் என்ற ஓட்டலில் சிக்கன் தந்தூரி, பிரைட் ரைஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். இதையடுத்து மாணவனுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மாணவன், கடந்த 29ம் தேதி உயிரிழந்தார்.

மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், 2 கிலோ கெட்டுப்போன சிக்கனை பறிமுதல் செய்து அழித்தனர். இதனிடையே மாணவனுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.