பாக்கெட்டும் இல்லை, பர்சும் இல்லை: ப.சிதம்பரம் கிண்டல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில், பாக்கெட்டும் இல்லை. பர்சும் இல்லை என அக்கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை பங்கு பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான வழக்கில்ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் ஆகியோருக்கு, அமலாக்கத்துறை மீண்டும் ‘சம்மன்’ அனுப்பியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

latest tamil news

இந்நிலையில், ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை: பணப் பரிமாற்றமே இல்லை, ஆனால் பணப்பரிமாற்றம் செய்தார்கள் என்று குற்றச்சாட்டு.தண்ணீரே இல்லாத குளத்தில் நீ அத்துமீறி நுழைந்து நீச்சல் செய்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்?. பாக்கெட்டும் இல்லை, பர்சும் இல்லை. ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? இவ்வாறு அந்த அறிக்கையில் சிதம்பரம் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.