இந்தியாவில் புதிதாக 4,041 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்திய  சுகாதாரத்துறை இன்று (03) வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை ஓய்ந்து தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தது.

இதனால் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் பதிவான நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் பாதிப்பு 2,745 ஆக இருந்தது. நேற்று 3,712 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் 4041 பேராக அதிகரித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டில் 145 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 இலட்சத்து 68 ஆயிரத்து 585 ஆக உயர்ந்தது.

இருப்பினும் கொரோனா தொற்றில் இருந்து 2,363 பேர் நேற்று கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 இலட்சத்து 22 ஆயிரத்து 757 ஆக உயர்ந்தது.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 21,177 ஆகவுள்ளது.

இத்வேளை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 24 ஆயிரத்து 651 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மத்திய சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.