இலங்கைக்கு 3,300 கிலோமருந்துகள் அனுப்பி வைப்பு| Dinamalar

கொழும்பு:இந்தியா, இலங்கையின் ‘சுவா செரியா ஆம்புலன்ஸ்’ சேவை நிறுவனத்திற்கு, 3,300 கிலோ மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.
கடந்த, 2016ல் இந்தியா வழங்கிய 58 கோடி ரூபாய் நிதியில் இலங்கையில் சுவா செரியா ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது. இத்துடன் இந்தியா இலவசமாக ஆம்புலன்ஸ் வாகனங்களையும் வழங்கியுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கை மக்களுக்கு இந்தியா அளித்த மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தபோது, மருந்துகள் பற்றாக்குறை குறித்து சுவா செரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆவன செய்வதாக அமைச்சர் உறுதி அளித்தார். அதன்படி 3,300 கிலோ மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.