இந்தியாவில் தினசரி கோவிட் பரவல் மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டியது| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4.041 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,041 பேருக்கு கோவிட் உறுதியாகியது. 2,363 பேர் குணமடைந்துள்ளனர். 10 பேர் உயிரிழந்தனர்.

கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,26,22,757 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,24,651 ஆகவும் உயர்ந்தது. தற்போது 21,177 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது வரை 193.83 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 12,05,840 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.