கட்டாய மதமாற்ற வழக்கு: டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-‘கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் வேண்டும். சமூக ஊடகங்களில் வெளியான தரவுகளின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க முடியாது’ என, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

latest tamil news

டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மிரட்டி, பணம் கொடுப்பதாக ஆசைகாட்டி கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க, டில்லி மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட கோரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு:மதமாற்றம் தடை செய்யப்படவில்லை. அது தனிநபரின் தனிப்பட்ட விருப்பம். நம் அரசியலமைப்பு அந்த சுதந்திரத்தை அளித்துள்ளது.

latest tamil news

கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் அதற்கான ஆதாரங்கள் எங்கே? எத்தனை பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். சமூக ஊடகங்களில் வெளியான தரவுகளின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க முடியாது.இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.