சுதந்திரமாக வீட்டில் இருக்கிறேன்! எதுவுமே தோன்றவில்லை: மனம் திறந்த அஸ்வின்


சுதந்திரமாக வீட்டில் இருக்கிறேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் 17 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 12 விக்கெட்களை மட்டுமே எடுத்தார். முக்கியமான போட்டிகளில் அஸ்வினின் பந்துவீச்சை எதிரணி வீரர்கள் சிக்ஸர்களாக விளாசினர்.

இதனால் தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு போனது.
அஸ்வினின் தவறு குறித்து பயிற்சியாளர் சங்ககாராவே பேசியிருந்தார். அதில், அஸ்வின் ஒரு ஓவர் வீசுகிறார் என்றால், அதில் 3 பந்தை வித்தியாசமாக போட்டு, பரிசோதனை செய்கிறார். மீதமுள்ள 3 பந்துகளில் மட்டும் விக்கெட்கள் வீழ்ந்துவிடாது. எனவே அஸ்வின் இனி வழக்கமான சுழற்பந்துவீச்சையே அதிகம் செய்ய வேண்டும் என கூறினார்.

சுதந்திரமாக வீட்டில் இருக்கிறேன்! எதுவுமே தோன்றவில்லை: மனம் திறந்த அஸ்வின்

தன் மீதான விமர்சனங்கள் குறித்து பேசிய அஸ்வின், எனது பவுலிங் குறித்து நான் தரமதிப்பிடு பார்க்கவே கிடையாது. வாழ்கையில் என்றுமே, அப்படி வீசியிருக்கலாம், இப்படி பவுலிங் செய்திருக்கலாம் என சிந்திக்கமாட்டேன். தினந்தோறும் என்ன நடக்கிறதோ அதை ஏற்றுக்கொண்டு செல்வேன்.

தென்னாப்பிரிக்க தொடருக்கான வாய்ப்பு போனது குறித்து பேசிய அஸ்வின், எனக்கு இப்போது எதுவுமே தோன்றவில்லை. ஏனென்றால் 5 மாதங்களாக பபுளில் இருந்துவிட்டு வந்துள்ளேன். சுதந்திரமாக வீட்டில் இருக்கிறேன்.

அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, கிடைத்துள்ள நேரத்தை மகிழ்ச்சியானதாக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

சுதந்திரமாக வீட்டில் இருக்கிறேன்! எதுவுமே தோன்றவில்லை: மனம் திறந்த அஸ்வின்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.