சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாகும் 9 பேர்.! நாளை பதவியேற்பு.!  

நாளை சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் பதவியேற்க இருக்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இருக்கும் வீராசாமி சிவஞானம். கோவிந்தராஜ்லு சந்திரசேகரன், ஆனந்தி சுப்பிரமணியன், கணேசன் இளங்கோவன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், முரளிராஜ் குப்புராஜ், சதிகுமார் சுகுமார குரூப், மஞ்சுளா ராம்ராஜு மற்றும் தமிழ்செல்வி உள்ளிட்டோரை நிரந்தரமான நீதிபதிகளாக நியமிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என் வி ரமணா தலைமையிலான கொலிஜியம் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. 

இத்தகைய சூழலில் நாளை இந்த ஒன்பது பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2020 டிசம்பரில் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றவர்கள். 

கடந்த வாரம் தான் இவர்கள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர் என்பது கவனிக்கதல்லது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.