தந்தை போதையில் தூக்கம் – 4 வயது மகள் பலாத்காரம் – பள்ளி மாணவனுக்கு வலை வீச்சு

காஞ்சிபுரம்

னது 4 வயது மகளுடன் பூங்காவுக்குச் சென்ற தந்தை தூங்கி விட்டதால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பெண் தனது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் ரயில்வே ரோடு பகுதியில் வசித்து வந்தார்.  அப்பெண் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக நேற்று முன்தினம் இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது, அவரது கணவரும் வீட்டில் இருந்துள்ளார். அந்த[ பெண் 4 வயது பெண் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு கணவரிடம் தெரிவித்துள்ளார்.

மிகவும் போதையிலிருந்த கணவர் சிறுமியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்றுள்ளார். அந்த பூங்காவில், சிறுமி விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் போதையிலிருந்த தந்தை ஆழ்ந்து தூங்கியுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் இதைக் கவனித்துள்ளான்.

அவன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம்  செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான். சிறுமியைப் பெற்றோர்கள் தேட தொடங்கினர். ஏதோ அழுகை குரலைக் கேட்டு சிறுமியைக் கண்டுபிடித்த பெற்றோர் அவளின் நிலையைக் கண்டு கதறினார்கள்.

சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் இந்த கொடூரத்தைச் செய்தது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே அந்த மாணவன் கடந்த பிப்ரவரி மாதத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.  சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு தலைமறைவான மாணவனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.