பாதாளச் சாக்கடை குழாய் பதிக்கும் பணியின்போது தொழிலாளி உயிரிழந்த விவகாரம்.. 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.!

மதுரையில் பாதாளச் சாக்கடை குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டும்போது  மண்சரிவில் சிக்கிய தொழிலாளி, தலை துண்டித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுவிளாங்குடியில் நடைபெற்ற பணியின் போது மண் சரிவில் சிக்கிய, சதீஷ் என்பவரை மீட்க பொக்லைன் மூலம் பணிகள் நடைபெற்ற நிலையில், அவரது தலை துண்டிக்கப்பட்டது.

இதனிடையே, உயிரிழந்த சதீஷின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்ச ரூபாயும், அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் நலவாரிய நிதியிலிருந்து 5 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.