ரயில் விபத்து4 பேர் பலி| Dinamalar

பெர்லின்:ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டதில், நான்கு பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியின் தெற்கு பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் என்ற இடத்தில், பயணியர் ரயில் நேற்று தடம் புரண்டது. இரண்டு அடுக்கு பெட்டிகள் உடைய இந்த ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். படு காயம் அடைந்தவர்கள் ரயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.