4 இந்தியர்கள் உடலுக்கு நேபாளத்தில் இறுதி சடங்கு| Dinamalar

காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தில், 19 சுற்றுலா பயணியருடன் சென்ற ‘தாரா ஏர்’ சிறியரக விமானம் சமீபத்தில் விபத்துக்குள்ளானது. இதில் மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர். மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் அசோக்குமார் திரிபாதி, 54, அவரது முன்னாள் மனைவி வைபவி, 51, மகன் தனுஷ், 22, மகள் ரித்திகா, 15 ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். நால்வரது உடல்களும் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் அமைந்துள்ள பாகமதி ஆற்றங்கரையில் நேற்று எரியூட்டப்பட்டன. அசோக்குமாரின் சகோதரர் இறுதி சடங்குகளை செய்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.