8ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!

கால்வாயில் மூழ்கியதால் வகுப்பு சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அந்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும் பூபதி என்ற மகனும் உள்ளனர். பூபதி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றபோது வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் செல்லும் கிருஷ்ணா கால்வாயில் கரையோரம் செருப்பு மட்டும் கிடந்தது. இதனையடுத்து அவர் கிருஷ்ணா கால்வாய் இறங்கியபோது வெள்ளத்தில் அடித்துச் சென்றது தெரியவந்தது இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கால்வாயில் மூழ்கிய பூபதியை கடந்த இரண்டு நாட்களாக தேடி வந்தனர். அவரின் சடலம் கிடைக்கவில்லை.

இன்று காலை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் சேருமிடத்தில் பூபதி சடலமாக கிடந்துள்ளார். இதை காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து. வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.