அடுத்தடுத்து மயங்கி விழுந்த நூற்றுக்கணக்கான பெண்கள்! அதிர்ச்சி சம்பவம்



இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் வாயுக்கசிவு ஏற்பட்டத்தால் பெண்கள் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் அச்சுதாபுரத்தில் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் திடீரென நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியில் இருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கிருந்து வெளியேறி ஓடி வந்தபோது அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

அவர்களுக்கு வாந்தி, மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாதிப்புக்குள்ளான பெண்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 140 பெண்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாயுக்கசிவுக்கான காரணம் தெரியவில்லை எனவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.