சாலையில் சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்த எரிந்த கார்..!

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு கிறிஸ்துவ திருச்சபை பாதிரியார் அருள்ஜீவா . இவர் சிவகங்கை மாவட்டம் அரியாண்டி புரம் தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவர் சென்றுகொண்டிருந்த காரில் மின்கசிவு ஏற்பட்டது.

காரின் ஒட்டுநர் மற்றும் பாதிரியார் அருள்ஜீவா உடனடியாக காரை விட்டு இறங்கினர்.  அவர்கள் இறங்கியதும் காரில் மளமளவென தீப்பற்றியது. இதுகுறித்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.