சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர், நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 2020-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சத்திக்குமார் சுகுமார குரூப், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகிய 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார்.

இவர்களில் நீதிபதி சத்திக்குமார் சுகுமார குரூப் தவிர்த்து மற்ற 8 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சத்திக் குமார் சுகுமார குரூப் வேறு ஒரு நாளில் பதவியேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.