போக்சோ வழக்கில் இளைஞருக்கு 13 ஆண்டு சிறை| Dinamalar

பாலக்காடு: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு, 13 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பெருவெம்பை சேர்ந்தவர் விஜய், 26. இவர் 2019 மார்ச் மாதம் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். ஆலத்துார் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நேற்று பாலக்காடு விரைவு சிறப்பு நீதிமன்றம் (போக்சோ) குற்றவாளிக்கு, 13 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 1.25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.