மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இந்திய உரம்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் உரம் கிடைக்கும் என்பதை விவசாய அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் எஸ். யோகவேள் தெரிவித்தார்.

அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர்களுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பு ,அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எச். சமரகோன் தலைமையில் வியாழக்கிழமை பிற்பகல் 02.06.2022 விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் சமகாலத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி குறிப்பாக இரசாயன உர விநியோகம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இந்திய உரத்தில் அதன் முதலாவது விநியோகத்திலேயே 65 மெற்றிக் தொன் உரத்தை மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க அமைச்சர் ஒப்புக் கொண்டதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் தெரிவித்தார்.

இந்திய உரம் ஒரு மூடை 10 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் எதிர்வரும் 25ஆம் திகதி உரம், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த போகத்தின்போது உர விநியோகம் கிடைக்கப்பெறாததால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஜுன் மாத இறுதிக்குள் இழப்பீடு கிடைக்கும் என்றும் இலங்கை விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் .மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.