Corbevax: பூஸ்டர் டோஸ் – கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!

பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் செலுத்திக் கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த பயோ லாஜிக்கல் இ நிறுவனம் கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது. இந்த தடுப்பூசி, 5 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்ட்ர் டோஸ் தடுப்பூசியாக பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி எது செலுத்தி இருந்தாலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோர்பேவாக்ஸை செலுத்திக் கொள்ளலாம்.

இதுவே இந்த ஹெட்ரோலோகஸ் தடுப்பூசியின் சிறப்பம்சம். இதுவரை ஏற்கனவே தடுப்பூசி டோஸ் செலுத்திய நிறுவனத்தின் தடுப்பூசிகளையே அடுத்தடுத்த முறை செலுத்திக் கொள்ள வேண்டும். இவை ஹோமோலோகஸ் தடுப்பூசிகள் வகையைச் சார்ந்தவை. இவற்றின் பயன்பாடு தான் நாட்டில் இதுவரை இருந்து வந்தது.

தனியார் மருத்துவமனை மற்றும் மையங்களில் ஒரு டோஸ் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி 250 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பயோ லாஜிக்கல் இ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மஹிமா டத்லா கூறுகையில், “எங்கள் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. நாட்டின் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி தேவையை நாங்கள் பூர்த்தி செய்வோம். இதன் மூலம் நாட்டின் கோவிட் தடுப்பூசி பயணத்தில் புதிய மைல்கல்லை நாம் எட்டியுள்ளோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.