இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. முதியவர் உயிரிழப்பு.!

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள கத்தாரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமாரவேலு (வயது 76). இவர் சொந்த வேலை காரணமாக ராணிப்பேட்டை நோக்கிய தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ராணிப்பேட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளி அருகே வரும்போது பின்னால் வந்த லாரி, குமரவேல் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குமரவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரவேலுவின் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.