கார் மீது கண்டெயினர் லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு.. தப்பியோடிய லாரி ஓட்டுநர் கைது.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!

புதுச்சேரியில் கார் மீது கண்டெயினர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தது குறித்து சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துக்குமாரசாமி என்பவர் தனது காரில் ரெட்டியார்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்திசையில் வேகமாக வந்த கண்டெயினர் லாரி, சாலை நடுத்தடுப்பை உடைத்து அந்த கார் மீதும் அதற்கு முன் சென்ற பைக் மீதும் மோதியது.

இதில், காரில் இருந்த முத்துக்குமாரசாமி, அவரது ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்தது தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.