குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் . இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். அன்பழகம் அந்த பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், மகாலெட்சுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராணி அவரது தாயார் மீனாட்சி ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.