மாணவி பலாத்கார வழக்கில் மற்றொரு சிறுவன் கைது| Dinamalar

ஹைதராபாத் : தெலுங்கானாவில், 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டார்; தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.

தலைநகர் ஹைதராபாதில், 17 வயது சிறுமியை காரில் வைத்து, சில பள்ளி மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் சில மாணவர்கள் அரசியல்வாதிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.இதையடுத்து இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசியல் ரீதியில் ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே பரஸ்பரம் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இந்த வழக்கில் ஆளும் கட்சி பிரமுகர் மகன் உட்பட இரண்டு பள்ளி மாணவர்கள், 18 வயது இளைஞர் ஒருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மற்றொரு சிறுவன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மற்றொருவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

‘மூடி மறைக்க முயற்சி’

இந்த சம்பவம் குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,வான ரகுநந்தன் ராவ் கூறியுள்ளதாவது:இந்த சம்பவத்தில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் எம்.எல்.ஏ.,வின் மகனுக்கும் தொடர்பு உள்ளது. மது கூடத்தில், அந்த சிறுமியுடன் இந்த சிறுவர்கள் பழகியுள்ளனர். அப்போது புகைப்படம் எடுத்துள்ளனர். அதில், எம்.எல்.ஏ., மகனும் இருந்துள்ளார்.ஆனால், பாலியல் பலாத்காரத்தில் அவர் ஈடுபடவில்லை என்று போலீசார் தொடர்ந்து கூறி வருகின்றனர். அவரை தப்ப வைக்க, உண்மைகளை மூடி மறைக்க போலீஸ் முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.