உத்தரகண்ட்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 25 பக்தர்கள் பலி| Dinamalar

டேராடூன்: உத்தரகண்ட்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்ததில் 25 பக்தர்கள் பலியாகினர். யாத்திரையாக மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த பக்தர்களின் வேன் விபத்தில் சிக்கிய பரிதாபம் நடந்துள்ளது.

கோவிட் பாதிப்பிற்கு பின்னர் உத்தரகண்ட்டில் உள்ள புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ,சார்தாம் யாத்திரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கரடு முரடான பாதை என்பதால் பக்தர்கள் பலர் இறந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

latest tamil news

இந்நிலையில் இமாலயம் செல்லும் வழியில் ரிக்காவ்காத் என்ற பகுதியில் பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. தில் சம்பவ இடத்தில் 25 பக்தர்கள் பலியாகினர். 10 பேர் காயமுற்றனர். சம்பவ இடத்தில் மீட்பு படையினர் சிக்கிய பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார். பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் பலியான குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

60 கழுதைகள் பலி

பக்தர்களை சுமந்து செல்லும் கழுதைகள் மர்ம முறையில் இறந்து வருவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. மலையில் கழுதைகள் வேகமாக செல்ல போதை பொருள் கொடுக்கப்படுவதாகவும், இதனால் இது வரை சமீபத்தில் 60 கழுதைகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.