உ.பி: `2024 மக்களவைத் தேர்தலே இலக்கு…’ – இடைத்தேர்தல் ரேஸில் இருந்து விலகிய காங்கிரஸ்

5 மாநில சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியானது ஒரு மாநிலத்தில் கூட வெற்றிபெறாததையடுத்து, கட்சிக்குள் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. எனினும் சமீப நாள்களில் கட்சியின் மூத்த, முக்கிய தலைவர்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறிவருகின்றனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸ்

இதுகுறித்து காங்கிரஸ், “கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலே இலக்கு” என விளக்கமளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ராம்பூர், அசம்கர் ஆகிய 2 மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்த நிலையில், தற்போது காங்கிரஸிலிருந்து இத்தகைய அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடதக்கது. இதுமட்டுமல்லாமல், ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ள ராஜ்ய சபா எம்.பி இடங்களுக்கான, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலால் கட்சிக்குள் பலரும் அதிருப்திக்குள்ளாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.