திருமலையில் ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம்| Dinamalar

திருப்பதி : திருமலை ஏழுமலையானை நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில், 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருமலை ஏழுமலையானை தரிசிக்க கோடை விடுமுறை காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வரத் துவங்கி உள்ளனர். வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.எனவே ‘வி.ஐ.பி., பிரேக்’ தரிசனம் ரத்து செய்யப்பட்டு, தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில், 90 ஆயிரத்து, 165 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்; 43 ஆயிரத்து 362 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் மூலம், 4.15 கோடி ரூபாய் வசூலானது. டிக்கெட் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு, பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர்.நேற்று காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள, 20 அறைகளில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.