மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம் வந்ததால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மராட்டிய அரசு அதிகரித்தது. தினமும் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு விட்டு சல்மான் கான் அமரும் பெஞ்சில் மிரட்டல் கடிதம் இருந்தது. மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து சல்மான் கான் மற்றும் அவரது தந்தையிடம் மும்பை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.