மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கினால், உக்ரைனில் மேலும் பல இடங்கள் ரஷ்யாவில் தாக்குதலுக்கு ஆளாகும் என மிரட்டல் விடுத்திருந்தார் புடின்.
அதாவது, உக்ரைனுக்கு ராக்கெட் அமைப்புகளை வழங்க இருப்பதாக சென்ற வாரம் அமெரிக்கா அறிவித்தது. அந்த அறிவிப்பால் எரிச்சலடைந்த புடின், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை அனுப்புமானால், உக்ரைனில் ரஷ்யா தாக்கும் இலக்குகளை அதிகரிக்கும் என எச்சரித்தார்.
ஆனால், ரஷ்யாவின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியுள்ள பிரித்தானியா, உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய முதல் ஏவுகணைகளை தான் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
அத்துடன், அந்த ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவது என உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்போவதாகவும் பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான Ben Wallace, திடீரென ஊடுருவலுக்காளான உக்ரைன், தங்கள் நாட்டை பாதுகாப்பதற்காக, அவர்களுக்குத் தேவையான முக்கிய ஆயுதங்களை வழங்குவதில் பிரித்தானியா முன்மாதிரியாக இருந்து வருவதாக தெரிவித்தார்.
ரஷ்யாவின் யுக்திகள் மாறிகொண்டிருக்கும் நிலையில், நாம் உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் விதமும் அதற்கேற்றாற்போல்தான் இருக்கவேண்டும் என்றார் அவர்.