Tamil Nadu News Updates: கேரளாவில் விழிஞ்சம் பகுதியில் 2 சிறுவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, விழிஞ்சம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படும் – இலங்கை பிரதமர்
இலங்கையில் பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படலாம். போதிய உரங்கள் இல்லாத நிலையில், விவசாய பணிகளை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
சென்னையில் 15வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ94.24க்கும் விற்பனையாகிறது
உத்தரகாண்ட் விபத்து – 22 பேர் பலி
உத்தரகண்டில் உத்தரகாசி மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, தலா, 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தோருக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி அறிவித்தார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்- ரஃபேல் நடால் சாம்பியன்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றார் ரஃபேல் நடால். இறுதிப்போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டை 6-3, 6-3,6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. நீரில் மூழ்கி இறந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ80 உயர்ந்து, சவரன் ரூ38,280க்கும், கிராம் ரூ4,785க்கும் விற்பனையாகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,518 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2,779 பேர் குணமடைந்துள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 782 ஆக உள்ளது.
உப்பு காற்றினால் திருவள்ளுவர் சிலை சேதமடைவதை தவிர்க்க, ரசாயன கலவை பூச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்படுகிறது
நைஜீரியாவில் ஒண்டோ மாநிலத்தில் உள்ள தேவாலயத்தில் அடையாளம் தெரியாத நபர் நடத்தி துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்தததாக தகவல்
பார்வை சவால் உடையவர்கள் எளிதில் கண்டறியும் வகையில் ரூ1,ரூ2,ரூ5,ரூ 10 , ரூ20 என சிறப்பு நாணயங்கள் வெளியிடப்படவுள்ளது. இன்று நடைபெறும் நிதி அமைச்சகம் மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் ஐகானிக் வார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிடவுள்ளார்,
உலகம் முழுவதும் 27 நாடுகளில் 780 பேருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல். பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் எச்சரிக்கை
டெல்லியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.