தமிழக அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிக்கான 4% ஒதுக்கீட்டை கண்காணிக்க உயர்நிலை குழு அமைப்பு

சென்னை: அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய பல துறை செயலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் ஆர்.லால்வேனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்தில் அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம்வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த 2022-23 நிதியாண்டில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள்சட்டம் 2016-ல் வலியுறுத்தப்பட்டுள்ளபடி இட ஒதுக்கீட்டை வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணி நியமனம் செய்வதை கண்காணிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும்’’ என அறிவித்தார்.இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசு,மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.