திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் 32 வயது பெண் மீது ஆசிட் வீச்சு.!

பெங்களூருவில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், விவாகரத்தான 3 குழந்தைகளின் தாய் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாசனை திரவிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் 32 வயதான பெண்ணும், அகமது என்பவரும் 3 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அகமது வற்புறுத்தி வந்த நிலையில், அதனை ஏற்க மறுத்த அந்த பெண் மீது அவர் திடீரென்று ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார்.

இதில், முகம் முழுவதும் காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிட் வீசிவிட்டு தலைமறைவான நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.