இரு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் – அமைச்சர் கஞ்சன நம்பிக்கை


அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என்று எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

11ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரையான 12 நாட்களுக்குள் குறித்த ஐந்து கப்பல்களையும் வரவழைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் மின்சக்தி மற்றும் எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினமும் நாளையும் பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றிய கப்பல்கள் இரண்டும், 16ம் திகதி இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் வரும் கடைசி டீசல் கப்பலும், 20ம் திகதிக்கு முன்னதாக கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்றும், 22ம் திகதி இன்னொரு பெற்றோல் ஏற்றிய கப்பலும் இலங்கை வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் - அமைச்சர் கஞ்சன நம்பிக்கை

இலங்கையில் டீசல் தேவை

நாளொன்றுக்கு இலங்கையில் டீசல் தேவை ஐயாயிரம் மெட்ரிக் தொன்னாக இருக்கின்றது. கடந்த நாட்களில் 2800 – 3000 மெட்ரிக் தொன் வரையில் நாளாந்தம் டீசல் வழங்கப்பட்டது.

இலங்கையில் பெற்றோல் தேவை

இரு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் - அமைச்சர் கஞ்சன நம்பிக்கை

நாளாந்த பெற்றோல் தேவை 3500 மெட்ரிக் தொன்னாகும். கடந்த நாட்களில் நாளொன்றுக்கு 2500 மெட்ரிக் தொன் வரையான பெற்றோலை நாடு முழுவதும் விநியோகித்துள்ளோம்.

இலங்கையில் மண்ணெண்ணெய் தேவை

அதே ​நேரம் மண்ணெண்ணெய்யை மட்டும் தெரிவு செய்யப்பட்ட மீனவ மற்றும் கமத்தொழில் செய்கை பிரதேசங்களுக்கு விநியோகித்துள்ளோம் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். 

இரு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் - அமைச்சர் கஞ்சன நம்பிக்கை



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.