இலங்கை:உர இறக்குமதி செய்ய ரூ.424 கோடி: இந்தியா உதவி| Dinamalar

இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம் உருவாகி வருவதை அடுத்து அந்நாடு உர இறக்குமதி செய்வதற்காக 424 கோடி ரூபாய் கடன் உதவியை இந்தியா அளிக்க உள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நம் அண்டை நாடான இலங்கையில் உர இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதன் காரணமாக விவசாயத்துறை 50 சதவீத இழப்பை சந்தித்தது.
இதனால் இலங்கையில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.இதையடுத்து உர இறக்குமதி செய்ய அந்நாடு முடிவு செய்தது. இந்தியாவில் இருந்து உர இறக்குமதி செய்ய கடன் உதவி கேட்டு இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் அந்நாட்டுக்கு 424 கோடி ரூபாய் கடன் உதவியை இந்தியா அளிக்க உள்ளதாக இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.