ஈரோடு 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்.. சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு போலீசார் சம்மன்..!

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஆவணங்களுடன் ஆஜராகுமாறு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்ற வழக்கில் சிறுமியின் தாய் உள்பட 4பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக  ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவல்துறையுடன் இணைந்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறுமி சொன்னபடி  சேலம்,ஓசூர்,திருவனந்தபுரம்,திருப்பதி ஆகிய இடங்களிலும் ஆய்வு நடைபெற்றது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.