தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு என உறவினர்கள் குற்றச்சாட்டு.. பெண்ணின் உடலுக்கு, நீதிமன்ற உத்தரவுபடி பிரேத பரிசோதனை..!

சென்னையில் தவறான முறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் உடலுக்கு, நீதிமன்ற உத்தரவுபடி பிரேத பரிசோதனை நடைபெற்றது.

வளசரவாக்கத்தை சேர்ந்த வினோதினி என்பருக்கு சின்னப்போரூர் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெற்றதை அடுத்து, உடல் நலக்குறைவால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர், கடந்த சனிக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தவறான அறுவை சிகிச்சையால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனை அடுத்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி பிரேத பரிசோதனை நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.