திரையரங்கில் இடைவேளையின் போது டிக்கெட் கேட்டு தகராறு… மதுபோதையில் ஊழியரை துரத்து துரத்தி அடித்த போதை ஆசாமிகள்

திருவள்ளூரில், தனியார் திரையரங்கில் டிக்கெட் கேட்டு மதுபோதையில் அடியாட்களுடன் வந்து தகராறில் ஈடுபட்ட நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், திரையரங்க ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருவள்ளூர் தேரடி பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் படம் பார்க்க வந்த 2 பேர், மதுபோதையில் டிக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது. திரைப்படம் இடைவேளையை நெருங்கியதாகவும், மது அருந்தியிருப்பதாலும், திரையங்க நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், டிக்கெட் தர இயலாது என திரையரங்க ஊழியர் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும், 10 பேர் கொண்ட அடியாட்களை அழைத்து வந்து திரையரங்க ஊழியரை துரத்தி துரத்தி அடித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.