நித்தியானந்தா ஜீவசமாதி ஆகி விட்டாரா? வெளியான 3 புகைப்படங்களால் ஏற்பட்ட பரபரப்பு


சுவாமி நித்யானந்தா சிலைகளை வைத்து நடைபெற்ற பூஜையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளது.

நித்தியானந்தா சாமியார் கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.
அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து விரைவில் உடலில் குடியேறி சத்சங்க உரையாற்றுவேன் என கூறி இருந்தார்.
இந்நிலையில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நித்தியானந்தா ஜீவசமாதி ஆகி விட்டாரா? வெளியான 3 புகைப்படங்களால் ஏற்பட்ட பரபரப்பு

உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரை இல்லாத நிலையில், நித்யானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது அவர் ஜீவசமாதி ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

ஆனால் இதை நித்தியானந்தா தரப்பு மறுத்துள்ளது.
இது குறித்த அளிக்கப்பட்ட விளக்கத்தில், கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது.

நித்தியானந்தா ஜீவசமாதி ஆகி விட்டாரா? வெளியான 3 புகைப்படங்களால் ஏற்பட்ட பரபரப்பு

சித்ரா நட்சத்திரம் என்பது பூமியில் ஸ்ரீபரம்ம சமாரின் செயல்பாடுகளை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் பூஜை. இது இந்து மதத்தின் உச்ச கடவுளின் நட்சத்திரம் ஆகும். அவர் தான் எல்லோருக்கும் கடவுள் என்பதால் அவரை வணங்க வேண்டும்.

அதன்படியே கைலாசாவில் அவரின் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறு பூஜை செய்யப்பட்டது. அவருக்கு இந்த நல்ல நாளில் எங்களின் மரியாதை வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தா ஜீவசமாதி ஆகி விட்டாரா? வெளியான 3 புகைப்படங்களால் ஏற்பட்ட பரபரப்பு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.