நுபுர் சர்மாவைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறை… 2 பேர் உயிரிழப்பு

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக நுபுர் சர்மாவை கண்டித்து, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறையில், 2 பேர் உயிரிழந்தனர்.

அப்பகுதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு நடத்திய போராட்டம் கல் வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு என வன்முறையில் முடிந்தது. இதில் பலர் காயமடைந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 2 பேர் உயிரிழந்ததாக ராஞ்சி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் வன்முறையில் படுகாயமடைந்த 8 போராட்டக்காரர்களும், 4 போலீசாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.