பேருந்தும்-லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 15 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

தென் ஆப்பிரிக்காவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

ஷ்வானின் வடக்கே உள்ள பாட்ரிஷோக் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியும்-பேருந்தின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், 15 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மேலும், விபத்தில் சிக்கிய 37 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.