காஷ்மீரில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக காஷ்மீர் போலீசார் வெளியிட்ட அறிக்கையில், புல்வாமா மாவட்டத்தின் த்ரப்கம் பகுதியில், பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும்,உள்ளூரை சேர்ந்தவர்கள். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தனர்.

உயிரிழந்த பயங்கரவாதிகளில் ஒருவன் ஜூனாயத் ஷூர்கோஜ்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவன், கடந்த மே 13ம் தேதி ரியாஸ் அகமது என்ற போலீசார் மரணத்திற்கு காரணமானவன். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.