கனடாவில் நள்ளிரவில் சடலமாக கிடந்த நபர்! கொலை செய்யப்பட்டதாக அறிவித்த பொலிசார்


கனடாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Dartmouth நகரில் தான் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது.
34 வயதான நெல்சன் பீல்ஸ் என்பவர் துப்பாக்கி குண்டுகள் உடலை துளைத்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் சடலமாக கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நெல்சன் சடலத்தை கைப்பற்றினார்கள்.
இது தற்கொலையா அல்லது கொலை என குழப்பம் நிலவி வந்தது.

கனடாவில் நள்ளிரவில் சடலமாக கிடந்த நபர்! கொலை செய்யப்பட்டதாக அறிவித்த பொலிசார்

(Jeorge Sadi/CBC)

இந்நிலையில் நெல்சன் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பரிசோதகர் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையில் நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை இப்பகுதியில் இருந்தவர்கள் இந்த கொலை தொடர்பில் வீடியோ அல்லது வேறு ஆதாரங்களை கொண்டிருந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.