பிறந்த வீட்டுக்கு சென்றார் நயன்தாரா

நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த 9ம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மறுநாளே திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அதற்கு மறுநாள் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று விமானம் மூலம் கொச்சிக்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து நயன்தாரா பிறந்த ஊரான திருவல்லாவுக்கு சென்றனர். அங்கு பெற்றோர்களிடம் அவர்கள் ஆசி பெற்றனர். இரண்டு வாரங்கள் வரை அவர்கள் நயன்தாராவின் பெற்றோருடன் தங்கி இருக்கிறார்கள். இதற்கு இடையில் கொச்சியில் மலையாள பத்திரிகையாளர்களுக்கு நன்றி சொல்ல இருக்கிறார்கள். பின்னர் சென்னை திரும்பும் அவர்கள் அவரவர் பணியாற்றும் படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.