#திண்டுக்கல் || கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இரண்டு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து.! 8 பேர் படுகாயம்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இரண்டு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவு பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலை தடுப்பில் மோதி சாலையின் மற்றொரு பாதைக்குள் சென்று எதிரே வந்த 2 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.