திருமணம் முடித்து 10 மாதம் குடும்பம் நடத்தியவர் உண்மையில்… அதிர்ச்சியில் உறைந்த இளம் மனைவி


இந்தோனேசியாவில் திருமணம் முடித்து 10 மாதங்கள் குடும்பம் நடத்தியவர் உண்மையில் பெண் என்பதை அறிந்து உறைந்து போயுள்ளார் இளம் பெண் ஒருவர்.

குறித்த 22 வயது இளம் மனைவி தற்போது தமது முன்னாள் கணவர் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்தோனேசியாவின் ஜம்பி நகரத்தை சேர்ந்த Ahnaf Arrafif என்பவரை டேட்டிங் செயலி ஊடாக குறித்த பெண் சந்தித்துள்ளார்.

தாம் ஒரு மருத்துவர் எனவும் நியூயார்க் நகரில் மருத்துவ படிப்பை முடித்துள்ளதாகவும் Ahnaf Arrafif தம்மை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மிக குறைந்த நாட்களிலேயே இருவரும் நேரிடையாக சந்தித்துகொண்டதுடன், ஒருவார காலம் குறித்த பெண்ணின் குடியிருப்பிலும் Ahnaf Arrafif தங்கிச் சென்றுள்ளார்.

திருமணம் முடித்து 10 மாதம் குடும்பம் நடத்தியவர் உண்மையில்... அதிர்ச்சியில் உறைந்த இளம் மனைவி

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தமது ஆசையை வெளிப்படுத்திய Ahnaf Arrafif-கு குறித்த பெண்ணின் பெற்றோரும் அனுமதியும் ஆசியும் வழங்கியுள்ளனர்.

ஆனால் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினருக்கு Ahnaf Arrafif நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தமது சொந்த குடும்ப உறுப்பினர்கள் எவரையும் இது நாள் வரையில் மனைவியின் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்யவும் இல்லை என கூறப்படுகிறது.

மேலும், சிறப்பு அந்தஸ்து பெற்ற மருத்துவர் என கூறிவந்த Ahnaf Arrafif திருமணத்திற்கு பின்னர் மருத்துவமனைக்கு செல்லாமலும் இருந்து வந்துள்ளார்.
மட்டுமின்றி, வீட்டில் இருக்கும் போது ஒருமுறை கூட ஆண்கள் போன்று நடந்துகொள்ளவும் இல்லை எனவும், குளிக்கும் போதும் உடை உடுத்தியிருந்ததும் தாயாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் முடித்து 10 மாதம் குடும்பம் நடத்தியவர் உண்மையில்... அதிர்ச்சியில் உறைந்த இளம் மனைவி

இந்த நிலையில், அந்த தாயார் தமது மகள் மீதான அக்கறையில் Ahnaf Arrafif இடம் ஆண் என்பதை நிரூபிக்க உடைகளை அகற்ற கோரியுள்ளார்.
இதில், உண்மை அம்பலமாகும் என்ற நிலையில் Ahnaf Arrafif நடந்தவற்றை வெளிப்படையாக கூறியுள்ளார்.

உண்மையில் தாம் ஒரு பெண் எனவும், Erayani என்பது தமது பெயர் எனவும், மருத்துவர் என பொய் கூறியதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது இந்த வழக்கு ஜம்பி நகர நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆண் என பொய் கூறிய விவகாரத்தை விடவும், மருத்துவர் என கூறி ஏமாற்றியது குற்றச்செயலாக பார்க்கப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.