Corona vs Unemployment: கொரோனாவினால் எதிர்காலம் இருண்டு போன சீன மாணவர்கள்

கோவிட், லாக்டவுன் மற்றும் வேலையின்மை என சீனாவில்  10.8 மில்லியன் பல்கலைக்கழக பட்டதாரிகளின் எதிர்காலமே இருண்டுவிட்டது. 

சீனாவில் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சனை தற்போது மிக அதிகமாக உள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, “இளைஞர் வேலையின்மை ஏற்கனவே சீனாவின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது, இது 18.4 சதவீதமாக உள்ளது”.

போர்ச்சுகலின் மொத்த மக்கள்தொகையை விட சீனாவில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த  மாணவர்கள் அனைவரும் சீனாவின் வரலாற்றிலேயே வேலையின்மை என்ற பிரச்சனையை தீவிரமாக எதிர்கொள்ளும் தலைமுறையாக இருக்கும்.

கடந்த சில தசாப்தங்களில் மோசமான வேலைச் சந்தையாக மாறிய நிலையில் மாணவர்களின் அவநம்பிக்கை அதிகரிக்கும் காலமாக இது உள்ளது. 

சீனாவில், 10.8 மில்லியன் பல்கலைக்கழக பட்டதாரிகள் அச்சுறுத்தும் எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர்: மோசமான வேலை சந்தை மற்றும் பொருளாதாரத்தின் மோசமான நிலை என கடினமாக காலகட்டத்தில் சீன பட்டதாரி மாணாக்கர்கள் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க | குரங்கு அம்மை: அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பூசி பற்றிய முழு விவரங்கள் இதோ 

கடந்த மே மாதத்தில், நகர்ப்புற இளைஞர்களின் வேலையின்மை 18.4 சதவீதம் என்ற உச்சகட்டத்தை எட்டியதாக, பாங்க் ஆஃப் அமெரிக்காவின் மெரில் லிஞ்ச் கூறியதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. ஜூலையில், பட்டப்படிப்பு முடியும் காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23 சதவீதத்தை எட்டும்.

ரியல் எஸ்டேட் சந்தையின் சரிவு, புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம், கல்வி மற்றும் பிற துறைகளின் மீதான ஒழுங்குமுறை ஒடுக்குமுறைகள் ஆகியவற்றின் காரணமாக ஏற்கனவே பொருளாதாரம் சுருங்கி வரும் நிலையில், COVID-19 மற்றும் அதன் தாக்கம் நாட்டில் கடுமையான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. 

இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் சீன சமூகத்தை எந்தளவுக்கு பாதிக்கும் என்று கணிப்பது சிரமமானதாக இருக்கும். இன்னும் ஒரு வருடத்தில், அதிபர் ஜி ஜின்பிங், மூன்றாவது முறையாக அதிபராக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிப்பது சீனாவின் ஸ்திரத்தன்மையில் ஆர்வம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு சிக்கலாக இருக்கலாம்.

மேலும் படிக்க | இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்

பீக்கிங் பல்கலைக்கழகத்தின் நிதிப் பேராசிரியரான மைக்கேல் பெட்டிஸின் கூற்றுப்படி, “அரசியலுக்கும் மக்களுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தம் நீங்கள் அரசியலில் இருந்து விலகி இருப்பதுதான், ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் கடந்த ஆண்டை விட சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நாங்கள் உத்தரவாதம் அளிப்போம்.”

பட்டப்படிப்பை படித்து முடித்து வெளியேவரும் பட்டதாரிகளுக்கான வேலைச் சந்தையை ஸ்திரப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என்று பிரதமர் லீ கெகியாங் கூறுகிறார்.

அவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பதவிகளை வழங்கும் ஒரு ஊக்குவிப்பு நிறுவனங்கள் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட பிற நன்மைகளுடன் கூடுதலாக மானியங்களைப் பெறும்.

கூடுதலாக, பட்டதாரிகளை தங்கள் சொந்த தொழில் தொடங்க ஊக்குவிக்க, சில உள்ளூர் அரசாங்கங்கள் மலிவு கடன்களை கிடைக்கச் செய்துள்ளன.

மேலும் படிக்க | கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் அடுத்த வைரல், எச்சரிக்கை விடுத்த ICMR

2008-2009 உலக நிதி நெருக்கடியின் போது இருந்ததை விட சீனாவில் நுழைவு நிலை வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமாக உள்ளது என்று ராண்ட்ஸ்டாட்டில் உள்ள கிரேட்டர் சீனாவின் நிர்வாக இயக்குனர் ராக்கி ஜாங் கூறுகிறார். புதிய வேலைகள் முந்தைய ஆண்டை விட 20-30 சதவீதம் குறைந்துள்ளன.

எதிர்பார்க்கப்படும் சம்பளமும் 6.2 சதவீதம் குறைவாக இருப்பதாக மற்றொரு ஆட்சேர்ப்பு நிறுவனமான Zhilian Zhaopin கூறுகிறது.

மேலும் படிக்க | Monkeypox Alert: தொண்டை மற்றும் ரத்தத்தில் 10 வாரங்கள் வரை நீடிக்கும்: அசாதாரண அறிகுறிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.