“சார்.. இப்ப தான் சார் முடி வெட்டினேன்.. என்னை விட்டுருங்க”.. புள்ளிங்கோ ஸ்டைலில் சுற்றிய மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்த போலீசார்..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒழுங்கற்ற சிகை அலங்காரத்துடன் சுற்றித் திரிந்த பள்ளி, கல்லூரி மாணவர்களை பிடித்த போலீசார், முடி திருத்தம் செய்து அனுப்பி வைத்தனர்.

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு புள்ளிங்கோ ஸ்டைலில் அதிக முடி வளர்த்துக் கொண்டு சுற்றித் திரிந்த மாணவர்களை பிடித்த போலீசார், முடி திருத்துபவரை வரவழைத்து அங்கேயே முடி திருத்தம் செய்தனர்.

அப்போது ஒரு மாணவன் இப்போது தான் சார் முடி வெட்டினேன் என்று கூறியும் விடாத போலீசார், அந்த மாணவருக்கு முடிவெட்ட வைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.