அடுத்த மாதம் உயர்தரப் பரீட்சை பெறுபேறு 

கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த மாதம் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உயர் தர பரீட்சைகள் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதியில் இருந்து மார்ச் மாதம் ஐந்தாம் திகதிவரை இடம்பெற்றது.

2 லட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 66 ஆயிரத்து 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.